Friday, October 21, 2011

அந்தி நேரத்தில்.....


அந்தி நேரத்தின்                  
அழகிய பொழுதினிலே
மஞ்சள் வெயிலின்
மரகத இதத்தின் சுகம்...

மனதிலுள்ள
சோகங்களும்
எதிரில் தோன்றும்
சலனங்களும்
இடம் தெரியாமல்
மறைந்து போகும்..

ஓங்கி ஒலிக்கும்                                    
அலைகடலின் நாதமும்
தொட்டுத்தழுவும்
தென்றலின் மென்மையும்
தித்திப்பாகும்- என்றும்
உணர்வுதனில்..

திகட்டாத இன்பமும்
தெளிந்த மனதின்
வண்ணமும் -எம்
வாழ்விற்கு ஒளியூட்டும்..

மஞ்சள் வெயிலின்
பொன் அழகில்
புதிதாய் பிறந்ததுபோல்
தோன்றிடும் பூமி...

மலர்ந்த மலர்களுடன்
மயங்கிய நெஞ்சம்
பறந்து திரியும்
பருவத்தின் எழிலில்..

 



பொன் மாலைப்போழுதோ
பூரிப்பாகும்
பொன்மஞ்சள் கதிரின்
புண்ணியம் தனிலே..

பூத்த மலர்களுடன்
பறந்திடும் இதயம்- என்றும்
சலனங்களை மறந்து
சுகங்களை சுகித்தவாறு...      


                                                                  

No comments:

Post a Comment