Sunday, October 23, 2011

''மீண்டும் மௌனங்கள் அழுகின்றன..!''



எதற்கோ 
மனது 
தவிக்கிறது..


எதையும் 
புரிய 
மறுக்கிறது....


அன்று 
செய்த 
தவறிற்கு 
இன்றும் 
தண்டனையா? 
புரியவில்லை
எனக்கு.... 


எதற்கு 
இந்த 
மாற்றம்? 
எதற்கு
இந்த 
சோகம்? 


புன்னகை மலர்கள் 
என்னிடமிருந்து 
உதிர்ந்துபோன 
மாயமென்ன.. ? 


மௌனம் கூட 
வலிக்கிறது. 
விழிகள் இங்கு 
கனக்கிறது. 


நேரங்கள் 
எங்கோ தூரமாகிட- 
உறைந்து போனது 
எனது இதயம்..
 


நான் 
உன் 
மனமெனும் 
மலரை கசக்கிவிட்டேனா?
மன்னிப்பாய் 
கண்ணா 
உன் மழலை 
மொழியால்...
மீண்டும் மௌனங்கள் 
அழுகின்றன--எனக்குள் சத்தமாக...!!


No comments:

Post a Comment