எதற்கோ
மனது
தவிக்கிறது..
எதையும்
புரிய
மறுக்கிறது....
அன்று
செய்த
தவறிற்கு
இன்றும்
தண்டனையா?
புரியவில்லை
எனக்கு....
எதற்கு
இந்த
மாற்றம்?
எதற்கு
இந்த
சோகம்?
புன்னகை மலர்கள்
என்னிடமிருந்து
உதிர்ந்துபோன
மாயமென்ன.. ?
மௌனம் கூட
வலிக்கிறது.
விழிகள் இங்கு
கனக்கிறது.
நேரங்கள்
எங்கோ தூரமாகிட-
உறைந்து போனது
எனது இதயம்..
நான்
உன்
மனமெனும்
மலரை கசக்கிவிட்டேனா?
மன்னிப்பாய்
கண்ணா
உன் மழலை
மொழியால்...
மீண்டும் மௌனங்கள்
மீண்டும் மௌனங்கள்
அழுகின்றன--எனக்குள் சத்தமாக...!!
No comments:
Post a Comment