Wednesday, October 19, 2011

கனவுக்காலங்கள்...

சுற்றும் பூமியின் 
சுதந்திரத்தில்...
வீசும் காற்றின் 
வசந்தத்தில்..
ஒலிக்கும் கடலின் 
கீதத்தில்...
காயும் நிலவின் 
குளிர்மையில்...
 
எம்
கனவுக்காலங்கள்
கடந்துபோனதை 
உணர்ந்தோமா
நாம்?



ஓங்கிய பனைகளின்
ஓரத்தில் நின்று -
பொட்டல் வெளியின்
மண்வாசனையுடன்
கதை பேசி வாழ்ந்த 
நாட்கள்
வருமா
மீண்டும்?



வெட்டவெளியில்
பட்டாம்பூச்சிபோல் 
பறந்த காலம்-
பால்நிலவின் ஒளியினில்
பிடிசோறு உண்ட காலம்
என்று மீழும்...?

 
மழையின்
குளிர்மையும்..
மண் வாசனையின்
சுகந்தமும்..
எங்கே போனது
இன்று..??


வசந்தங்கள்
தொலைத்தோம்...
வாழ்க்கையை 
இழந்தோம்...
 
கனவுகளை 
சுமந்தோம்..
இன்று-
கவிமட்டும்
படைக்கிறோம்...

 
காத்திருப்போம்
மீண்டும்
கானல் நீராகாத
கனவுகளின்
வருகைக்காய்...!
                                                                       

No comments:

Post a Comment