Saturday, October 22, 2011

ஜனனம்.... ♥



அன்று 
சோகத்தில் 
துடித்த இதயம்
இன்று 
உன் அன்புக்காய் 
துடிக்கிறது...
 

உன் அன்புக்காய் 
என்பதை விட
உன் அன்பினாலே
தான் துடிக்கிறது..
 
அன்று 
தமிழை மட்டும்
காதலித்தேன்
இன்றோ
தமிழுடன் சேர்த்து
உன்னையும்....
 
என் 
வாழ்விற்கு- புது
அர்த்தம் சொன்னாய்
என்
மௌனத்தைக்கூட
கவியாக்கினாய்..
 
உன் 
நினைவுகளில்
துடிக்கும்
என் இதயம்...
 


அதில் 
என்றும்
உனக்கான -எந்தன்
ஜனனம்.... ♥

No comments:

Post a Comment