Wednesday, September 19, 2012

தொலைந்துபோன இசை..



மௌனத்துடன் 
பேசவைத்தாய்..
தனிமையுடன் 
புலம்ப வைத்தாய்..!

தொட்டுவிட்டு
எட்டிச்சென்று
வேடிக்கை
பார்த்தாய்..!

விழிகள் பேசும்
மொழிகள் - அதை
நீ
அறியாயோ..!

தொலைந்துபோன
இசை - அதை
நீ
இசைப்பாயோ..!

அருகில் நின்றாய்
தெரியவில்லை
உன் காதலின்
ஆழம்..!

தொலைவாய்
சென்றாய்
வலிக்குதடா
என்
கண்களின் ஈரம்..!

அருகில் வாராயோ..
விரல்கள் தாராயோ..
நான்
மீண்டும் துளிர்ப்பேனோ..
இல்லை
தவிப்பில் இறப்பேனோ...!

No comments:

Post a Comment