மௌனத்துடன்
பேசவைத்தாய்..
தனிமையுடன்
புலம்ப வைத்தாய்..!
தொட்டுவிட்டு
எட்டிச்சென்று
வேடிக்கை
பார்த்தாய்..!
விழிகள் பேசும்
மொழிகள் - அதை
நீ
அறியாயோ..!
தொலைந்துபோன
இசை - அதை
நீ
இசைப்பாயோ..!
அருகில் நின்றாய்
தெரியவில்லை
உன் காதலின்
ஆழம்..!
தொலைவாய்
சென்றாய்
வலிக்குதடா
என்
கண்களின் ஈரம்..!
அருகில் வாராயோ..
விரல்கள் தாராயோ..
நான்
மீண்டும் துளிர்ப்பேனோ..
இல்லை
தவிப்பில் இறப்பேனோ...!
No comments:
Post a Comment