Tuesday, August 7, 2012

மாறிப்போன பெ/ஆண்மை.. (தறிகெட்டுப்போனவர்களுக்காய்)


ஊரென்பர்.. பேரென்பர்..
நாடென்பர்.. வீடென்பர்..

கன்னியை பார்த்து
கவிதை வடிப்பர்..
அண்ணியுடன் சேர்ந்து
கட்டில் கலை படிப்பர்..

தொட்டிலில் ஆடும்
குட்டிக் குழந்தையைக்கூட
தொட்டுப்பார்க்கும்
வஞ்சக நெஞ்சம்..

பார்வைக்கு அஞ்சி
பயந்தொளியும் பெண்மை
இன்று
பூவுக்கு ஏங்கி
புது சுரம்
பாடுகிறது..

கட்டிவிட்டு
தொட்டுச்சென்ற கணவன்
தொலைவாகிவிட
எரியும் நெருப்பை
கொழுந்தன் அணைக்கின்றான்..

சீதைகளான பெண்கள்
சிதைகளில் மாண்டுபோக
போதைகளாய் கண்கள்
சீர்கெட்டு அலைகிறது..

பத்தாம் வகுப்பில்
பாலியல் சீர்கேடு..
பற்றவைத்தது
பள்ளியின் ஓர் கிளடு..

விதவைகள் கூட இங்கே
விற்பனை பொருட்கள் தான்..
கலவைகளில் அவை கலக்க
விதியெங்கே..? கதியெங்கே..?

சொந்த மகளின்
சுகம் கண்டு
சிதைத்த கதை
கேளீரோ..?

சுட்டுவிடும் சூரியனும்
இதைக்கண்டு
சுடமறந்து கண்ணீர் விடும்..

சித்திர பாவையவள்
சீவிமுடிக்க மறந்திட்டாள்..
உத்தரத்தில் தொங்கிவிட்டால்
உறுத்தலில்லை காணீரோ..?

பெண்ணும் இன்று 
பெண்ணாயில்லை..
ஆணுமின்று
ஆணாயில்லை..
அபலைகளின் வாழ்வுமட்டும்
அந்தரத்தில்..
இது
மாறவில்லை...! 

No comments:

Post a Comment