Monday, May 28, 2012

வைத்த பாசம் பொய்த்துப் போனது ...



ஏதேதோ எண்ணங்கள்
பிரிவை உணர்த்திவிட
எங்கெங்கோ அலையும்
என் மனம்..

மௌனமாய்
உணர்வுக்குள் அழுது
உதட்டில்
சிரிக்கிறேன்...

என்றோ
சிதைந்துபோன
மனதை
நீ பண்படுத்தியது-
இன்று அதை
புண்படுத்துவதற்காகவா..?

உன் ஒற்றை வார்த்தையில்
கருவானவளை
சில நொடிப் பிரிவில்
சிதைத்துவிட்டாயே..!
ஏன்? ஏன்? ஏன்?

சிந்திய
கண்ணீருக்கும்
சிதைந்துபோன
என் உள்ளத்திற்கும்
சொல்வாயா உன்
சித்தாந்தத்தை..?



முன்பு
ஏமாற்றம் ஒன்றே
வாழ்க்கையானது!
இன்று
ஏக்கம் என்பதே
ஸ்வாஸமானது

நீ
கூறிய வார்த்தைகள்
கனவானதடி
இன்று- என்னில்..

கடந்துபோன
நேரங்கள்
கனவாய்
கொல்லுதடி
என்னுள்ளே...

நிகழ்ந்தவையெல்லாம்
கனவாயாகக் கூடாதா..?

வாழ்வின்
இடையில் வந்தாய்-
என் வாழ்க்கை
மலரும் முன்னே
சென்றாயே..

உன்னோடு
கதைபேசி
நானிருந்த நேரங்களின்
வலிகளை உணர்கிறேன்
இன்று..

உன்னோடு கதைபேச
உரிமையில்லை
என்னிடம்..

உன்னோடு
தொடர்ந்து வர
உள்ளமுமில்லை
என்னிடம்...

ஆனால்
நீ விட்டுச்சென்ற
தடயமாக
அக்கா
உன் ஞாபகங்கள்
மட்டும் என்னுள்ளே..!



No comments:

Post a Comment