Friday, May 18, 2012

எழுச்சி..!



மெல்லிசையின் கீதத்தில்
மௌனமாய் உன்
நினைவு..

மறைக்கப்பட்ட 
தனிமைக்குள்
மறுதலையாய்
உன் விம்பம்..

மனதின் ஆசைகள்
விழிகளில்
நீராகி
தலையணை நனையும்
தவிப்புகள் 
தொடரும்..

காதல் தொட்டு
காமம் கடந்து
தாய்மையாகி
தாலாட்டும் உன் அன்பு..

தனித்திருக்கும்
பொழுதுகளில்
கவியாகி
எழுதிடும்
உன் நினைவு...

சமூகத்தால்
உணர்வுகள்
சிதைக்கப்படும் வேளை
எழுச்சிகீதம் பாடும்
உன் உரிமை
என்னுள்..

தோல்வி பல 
வந்தாலும்
நெருக்கமான
உன் அன்பால்
தொலைவாகிடும்
சோகங்கள்..

துணிந்துவிட்டேன்
எழுவதற்கு..
உன் துணை
என்னுடன் இருக்கையிலே...! 

No comments:

Post a Comment