Tuesday, May 15, 2012

உன்னை கண் தேடுதே....




விழியோரம் நீர் கசிந்து
விழிகள் நனையுதே..
சூழ்ந்துவிட்ட தனிமையும்-
மறந்துபோன இனிமையும்
மாசற்ற உன் அன்பில்
நேசம் காணுதே..


உன்
அன்பான காதலும்
பண்பான நேசமும்
தேகம் விட்டுச் சென்றாலும்
என்னுள் வாழுமே..


மன்னவனே,
உந்தன்
மார்பினில்சாய்ந்தபடி
மனதில் உன்
இனிமை சுமந்து
என்
மூச்சுக்காற்றைநிறுத்திட தோணுதே..


வைகறையினிலும்
அந்தி சிந்தும் வேளையிலும்
அன்பனே
உந்தன் முகம்
பார்த்திட ஏங்குதே...


தொலைவான
வாழ்க்கையெண்ணி
தொலைந்துபோன
சோகங்களை தொட்டெடுத்து
உன்னோடுவாழ்ந்திட எண்ணுதே..


தினம் தினம்நாடும்
திவ்ய தரிசனமாய்
தித்திக்கும் உன் முகம்
என்னுள் மலருதே..


ஏக்கங்கள்
கூடிநிற்க
என்னுள்ளே
பல கனவு
பார்த்து-காத்து இருக்கையிலே
உன்னை கண் தேடுதே...!!!





No comments:

Post a Comment