உனக்குத்தான் புரியவில்லை
எந்தன் நேசத்தின்
ஆழம் என்னவென்று...
உனக்குத்தான் புரியவில்லை
நான் வாடும் தனிமையில்
நீ வேண்டும் என்பது...
உனக்குத்தான் புரியவில்லை
உலகமெல்லாம் நீயாகி
என்னை
உருக்குலைக்கிறாய் என்பது...
தூங்கும்போதும்
உன் ஞாபகம்...
விழிகளுள்ளும்
உன் பார்வைகள்...
இதயத்தில் என்றும்
உன் வார்த்தைகள்...
தனியாய்த்தான் தவிக்கிறேன்
என்றாலும்
நீ வாழ்கிறாய் என்னுள்ளே...
தோற்றுத்தான் போய்விட்டேன்
உன்னிடத்தில் மட்டுமல்ல..
இந்த உலகத்தின்
பார்வையிலும்தான்...
-பிறைநிலா
// நீ வாழ்கிறாய் என்னுள்ளே...... //
ReplyDeleteஅருமை...
வாழ்த்துக்கள்...