வா..
வந்து பூட்டிக்கொள்..
வாட்டமில்லாத
உன் இமைகளோடு
வருடிக்கொள்..
தேய்கின்ற காலங்களை
தேயாமல்
பார்த்துக்கொள்வோம்..
ஓயாத கடல்
பெருக்கி
ஆடையாக
உடுத்துக்கொள்வோம்..
வானவில்லை வட்டமிட்டு
தெம்மாங்கு
நாம் படிப்போம்..
தென்றலைத் தேராக்கி
தேவலோகம்
போய்வருவோம்..
என்மேல்
உனை உடுத்து..
உன்மேல்
எனை அணைத்து..
உந்தன் நெஞ்சில்
ஒட்டிக்கொள்
எந்தன் உயிரை..
இரு விரலிடையில்
தைத்துக்கொள்
எந்தன் இதழ்களை..
உனைநோக்கி
எனையிழுத்து
உயிரோடு
கவியெழுது..
வா..
வசந்தங்கள்
பல சொல்லி
வருத்தங்களை
களைந்துவிடு..
வந்துவிடு..!
கவியன்புடன்
-பிறைநிலா-
ரசிக்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...