Tuesday, February 11, 2014

அத்தான் உனை ..



உந்தன் விழிசொல்லும் 
ஒற்றை வார்த்தையில் 
பற்றிப்பிடிக்கின்றது 
நாணம்... 

உந்தன் 
மீசைநுனி சொல்லும் 
ரகசியவார்த்தையில் 
வற்றியே போகின்றது 
வெட்கம்... 

கைகள் கோர்க்கத்தான் 
தொட்டு விலகத்தான் 
அத்தான் உனை 
அன்பால் அணைக்கத்தான்... 

மௌனித்த பல 
நொடிகளில் 
இதழ்களால் 
கோடிமுறை பேசிவிடுகிறாய்... 

புன்னகையை 
மட்டும் விதைக்கிறது 
பெண்மை...
அதையேனும் விட்டுச்செல் 
களவாடிப்போகாமல்.. 

(யாவும் கற்பனையே.) 

-பிறைநிலா-

1 comment:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?

    ReplyDelete