Thursday, January 28, 2016

ஹிருதயா!



மௌனச்சாயத்தை
என் உதடுகளில் அப்பிவிடுகின்றாய். 
என் கேள்விகளுக்கு பதில் இல்லை.
என் நேசங்களின் முகவரி இல்லை.
உன்னிடம் 
எனக்கான பொழுதுகளும் இல்லை. 
இறுதியில் சாயம் மட்டும் என் உதடுகளுக்கு.

அது ஒரு வெளி
ஆத்மாவும் நானும் பேசும்பொருள்.

இருக்கிறாயா?
இருக்கிறேன் இருக்கிறேன்!
புரிகிறதா உனக்கு?
புரியவில்லை தெரிகிறது!
முடிவு?
விளங்கவில்லை.
ஓ.. என் ஆத்மாவே...
ஓலமிடாதே அலுத்துவிட்டது.
என் கண்ணீருமா?
பழகிப்போனது.
அப்பொழுது நான்?
பழையவள்தானே நீ!
என் நேசம்?
புதிதாய் ஏதுமில்லை.

ஆக,
பரிசுத்தத்திற்கு பதில் புதுமைதான் உன் தேவை.
ஹ..ஹ.. உலகத்தேவை!
ஆத்மார்த்தீ ஒழிந்துபோ
இயலாது.
ஏன்?
நான்போனால் நீ பிணம்.
அந்த திமிர்தானே உனக்கு.
இல்லை யதார்த்தம்.

மீண்டும் மௌனச்சாயம்
உதடுகளில்.
ஆத்மா புகுந்துகொண்டது 
ஹிருதயஒலிக்குள்.
வெளி குறுகி வழியாக
நீ தேடப்படும் 
இறுதி பயணவிளிம்புகளில்
நடக்கத்தொடங்கியிருந்தது 'நான்'. 

-பிறைநிலா-
28-01-2016
6:35pm


No comments:

Post a Comment