Friday, January 22, 2016

ப்ரியத்தீ!


நீண்ட பொழுதொன்று 
பிரியங்களோடு 
பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டது காலம். 
வார்த்தைகளின்றிய சலசலப்பை 
பார்வைகளால் பகிர்ந்துகொண்டது. 
மயான அமைதி. 
மட்டுப்படுத்தப்பட்டிருந்தது 
உனக்கும் எனக்குமான 
இடைவெளி. 

நான் 
நரகத்தின் வாசலில் தேவதையாயும் 
நீ 
சொர்க்கத்தின் உச்சத்தில் ராட்சசனாயும்.

நடுவில் பெருகியதென்னவோ 
நேசத்தின் ஜீவநதி. 
என் கண்களுக்கும் 
உன் பாதங்களுக்குமான ஸ்பரிசம் 
நதியில் கலந்துபோனது. 

இறுதி அணைப்பு அது. 
பார்வைகளால் பரிமாறப்பட்டது. 
ஸ்பரிசிக்கத்துடித்தது என்னவோ 
பிரியங்களை மட்டும்தான். 
முடிவிலியாய் மூடப்பட்டது 
உனக்கும் எனக்குமான 
பிரியங்களின் நுழைவாயில். 

-பிறைநிலா-
22/01/2016
3:25

No comments:

Post a Comment