Monday, February 8, 2016

மரணமே முத்தமிடு



என் ஜீவ மரணமே
ஒருமுறையாவது முத்தமிடு
என் இதழ்களை.
உறக்கமில்லாமல் கழியும்
ஒவ்வொரு நிசிகளின் நெருடலிலும்
ஓராயிரம் வலி தெறிக்க
விடியலில் புன்னகைக்கும் 
போலியாய் சுயம் இங்கு.
கல்லடிபட்டு காய்த்துப்போன ஊனங்கள் 
கலர்கலர் கனவுகளை
கறுப்புவெள்ளையாக்கிய (அ)நியாயங்கள்
பெண்தானே என்று அடக்கிப்போன அகம்பாவ ஆத்மாக்கள்
முதுகுவழி கிழித்து முகம்நோக்கி
சிரிக்கும் முள்ளந்தண்டிலிகள்

அகோரங்கள்கூட அழகு
ஆனால் 
அசிங்கங்கள் எப்படி அழகாகும்?
சாக்கடை சமூகம்
பேடிமை சாத்திரம்
அக்கினியில் குளித்தாலும்
அசிங்கமென்றேசொல்லும்
மையத்து அதிகாரம்

மரணமே ஒருமுறை
தீண்டிவிடு என் இதழ்களை
இனியாவது
என் வாழ்க்கையை நான் 
வாழ்ந்துகொள்ள. 

-பிறைநிலா- 
11:03
8/2/2016

No comments:

Post a Comment