Thursday, December 9, 2010

க'விதை' ----......

கவிதை என்பது...
களங்கமற்ற பல
கனவுகளின் வாயில்..........

உணர்ந்து கவியியற்றினால்
உண்மையான அதன்
உயிர்ப்பு புரியும்........

இதயத்தின்
இனிமையையும்
இவ்வுலக துயரத்தையும்
இயல்பாய் கூறும் கவிதை...

க'விதை'  ----
கருத்தை விதைத்து
கருவை வளர்ப்பது....

கனவுகளை சிதைக்காதீர்...
கவிதையை பிரதியாக்காதீர்...
கண்களில் நீர்தனை
களமாக்கி செல்லாதீர்..

கவியை திருடுவது...
கல்நெஞ்சக்காரர் செயல்...
தாயின் அமுதத்தை
பிழிந்தெடுக்கும்
ஈனச் செயல்...

எமது உயிரை,
உயிர்ப்பை
எடுத்தெறிந்து
அழிக்கும் செயல்...

இதைவிட
எம்மை
உயிரோடு
புதைத்துவிடுங்கள்.....

ஆனால்...
எம் உயிர்நாடியை
எம்மிடமிருந்து
பிரிக்காதீர்கள்..

சுய உணர்வுகளை
சுதந்திரமாய் பயன்படுத்தி
இயற்றுங்கள் உங்கள்
இளமைக் கவியை...
பிரதி செய்யாதீர்..
எம் ஜீவ கவியை...!!!

No comments:

Post a Comment