Sunday, October 28, 2012

காற்றைக் கிழித்தபடி..!


பூமியில் புதைந்து
புதுமையாய் எழுகிறது
ஓர் நாற்று..

சகதியில் புரண்டு
சகலமும் அடங்கி
சலனமற்றதாய்
ஓர் காற்று..

காற்று..
அது நாற்றை தேடி
ஓலமிட
நாற்று..
அது
காற்றை கிழித்து
கூச்சலிடும்..

ஆயிரம் பிணந்தின்னிகளும்
நூறாயிரம் காட்டேரிகளும்
பலகோடி சாத்தன்களும்
படபடக்கும் நிசப்தவேளை..

காற்றைக் கிழித்த
நாற்றுமட்டும்
காலதேவனை
நாடிச்செல்லும்..

காலதேவனின்
காலடித்துகள்
காலத்தையே
மறைத்து நிற்கும்..

அணுவுக்குள்
கருவாகி
ஆகாயமே
அகண்டமாகும்..

நாற்று மட்டும்
நிர்க்கதியாகி
நாயகனின்
காலடி சேரும்..!

No comments:

Post a Comment