உடைந்து போன
என் கனவுகளை
உனக்காய்
கோர்த்துவைத்திருக்கும்
என் மனது..!
******
சில நாட்களாய்
பாலைவனமாகிவிட்ட
என் மனதில்
மழை- உன் முகம்
பார்த்ததால்..!
******
மீண்டும்
கனக்கிறது விழிகள்
எம்
தொலைந்துபோன
நாட்களை எண்ணி..!
*****
ஏக்கங்களை தந்து
தூக்கங்களை
பறிக்கிறாய்- அன்பான
திருடன் நீ..!
*****
மீண்டும்
உடைந்த கனவுகளை
கோர்க்கின்றேன் - உன்
தரிசனத்திற்காய்..!
No comments:
Post a Comment