நீண்டுபோன இரவுகளில்
நிழலைத்தேடி
தொடர்கிறது
என் பயணம்..
நிசப்தமான
இடுகாடுகளிடையே
விடையின்றி
தேடுகின்றேன் என்
வினாக்களை..
மாண்டுபோனது
என் கனவு..
மரித்தலில் சுருண்டு
தீய்ந்து போனது..
கோடுபோட்ட
வேலிதாண்டி
காலியான
வானைநோக்கி
கருகிப்பறந்தது
காய்ந்த கனவு..
காற்றோடு
அலைமோதி
காகிதத்தில் கரியாகி
தொடமுடியாமல்
தடுமாறிவிழுந்த கனவு
தலைதெரியாமலே போயிற்று
தணலோடு இன்று
வேகிற்று..!
No comments:
Post a Comment