Sunday, November 20, 2011

சின்னவனே...

 

சின்னவனே,
உன் ஸ்பரிசம்
மலரினும்
மென்மையோ...

உன் 
செல்ல சிணுங்கல்கள்
சின்ன குறும்புகள்..

உயிர்வரை
ஜனிக்கிறதே
என்ன மாயமோ...

குழந்தை
ஒன்றின்
நாதம்
இதயத்தின்
சங்கீதம்...


அழகின்
சொப்பனங்கள்
உன்னுள்ளே
அடங்கியதோ..

தத்தும்
தாவும்
உன் 
பிஞ்சு பாதம்...

சின்னக்
கண்கள்
சிட்டாய் 
துடிக்கும்..

தொட்டு
பார்க்கும்
உன்
சின்ன கரம்...

சிங்காரக் கண்ணா
சித்தத்தில்
நிறைந்தாயே..

உன்
மொழியின்
இனிமையிலே
சோகம்
மறக்கிறேன்
நான்....!

No comments:

Post a Comment