Tuesday, November 8, 2011

வேண்டுதல்..!


உனக்கான
வலிகளை
நான்
சுமக்கிறேன்..


எனக்கான
இதயத்தை
எடுத்துக்கொண்டவன்
 நீ
என்பதால்
மட்டுமல்ல..


நான்
உன் 
தாயும்
என்பதால்...


எனக்கான
மகிழ்வுகளை
உனக்காய்
பரிசளிக்க
விரும்புகிறேன்...


நான்
உன் தாயானவள்
என்பதால்
மட்டுமல்ல..


உனக்கான
உன்னவளும்
நான் தான்
என்பதனால்..


ஏற்றுக்கொள்
என்னவனே- உன்
உதட்டில் சுகிக்கவும்
உள்ளத்தில்
வளர்க்கவும்
இப் புன்னகைகளை...



ஏற்பாயா..
உனக்கான
என் 
வேண்டுதலை...???
                                                                         

No comments:

Post a Comment