Saturday, November 26, 2011

மலர்..


உன் விழியோரம்
நானிருந்து
கதை படிக்கும்
நேரம்
என் மனதோரம்
கானகுயில்
கவி பாடும்..


உன் மொழியோரம்
நான் மயங்கும்
நேரம்
என் உணர்வோரம்
உன் சுகந்தம்
பூக்கும்..


காதலா,
உன்னை 
கடவுளாய்
ஏற்கிறேன் -
உனக்கான
பூஜை மலராய்
நான் வேண்டுமென்பதால்...!!!

No comments:

Post a Comment