என்றோ
என்னை விட்டு
பறந்துபோனது
அந்த
பட்டாம்பூச்சி..
அன்றே
தொலைந்துபோனது
என்
கனவின்
சுகம்...
சுகமற்ற
வாழ்விலே
நிலையற்று
நானின்று
நிர்கதியான
பொழுதுகள்
பல...
விழி நீர்
வழிந்து
விடைகாணா
பொழுதுகள்
சில...
மௌனங்களின்
வலிமையைவிட
புரியாத
அந்த வார்த்தைகளின்
வலிகள்
எத்தனையோ..
எண்ணிப்பார்த்தும்
முடியவில்லை
எண்ணாமலிருக்கவும்
இயலவில்லை...
ஏதோ
இன்றும்
என் வாழ்வைவிட்டு
என்றோ தொலைந்த
மகிழ்ச்சியெனும்
அந்த
பட்டாம்பூச்சியை
எண்ணியவளாய்...!
No comments:
Post a Comment