Wednesday, November 16, 2011

நம் வாழ்க்கை காத்திருக்கும்...

உந்தன்
அன்பின்
மடிதனிலே
உருகிட
வேண்டும்
என்றும்
நான்...

இளமையின்
தனிமையும்-
இனிய
உன்
வசந்தமும்
என்றென்றும் 
வேண்டும்
எனக்காக..

காதலின்
இனிமைக்கும்
தனிமையின்
வசந்தத்திற்கும்
அழகாய்
ஒரு
வீடு
செய்வோம்- அதில்
நீயும்- நானும்
வாழ்வதற்காய்..

 நமக்காய்
நாம்
வாழும் வாழ்வில்
எமக்கான
இனிமைகள்
சின்ன சின்ன
குறும்புகள்
செல்ல சிணுங்கல்கள்
குட்டி சண்டைகள்...

நமக்காய்
ஒரு சிறு
வீடு..
அதில்
நறுமண
மலர்த்தோட்டம்..
வாழ்க்கை
சுகமாகும்
என்றும்
இன்பத்தின்
மடியினிலே...

யாருமற்ற தனிமையிலே
உன்னருகில்
நானும்
என்னருகில்
நீயுமிருக்க
நமக்காய்
நம் வாழ்க்கை
காத்திருக்கும்...




No comments:

Post a Comment