உனது வருகைக்காய்
ஏங்கும் மனதுக்கு
உன் சிறு பிரிவைக்கூட
தாங்க சக்தியில்லை..
நீ வரும்போது
நீ வரும்போது
துள்ளிக்குதிக்கும்
இந்த இதயம்- நீ
செல்லும்போது
துடிப்பற்று நின்று விடுகிறதே..
உன் வரவை எண்ணி
உன் வரவை எண்ணி
மலரும் விழிகள்- நீ
செல்லும் பொழுதினில்
விழிநீர் உதிர்த்து
வாடுகிறதே கண்ணா..
உன்னோடு நானிருக்கும்
உன்னோடு நானிருக்கும்
நேரங்கள் அத்தனையும்
என் கல்லறை வரை
அழியாது- அழிக்கமுடியதது..
உன்னோடு இருக்கும்
உன்னோடு இருக்கும்
அந்த நேரங்களுக்காய்
தினமும் தவிக்கும் மனதுடனும்
நீர் சிந்தும் விழியுடனும்
காத்திருப்பாள் இவள் - என்றும்
உன்னை எண்ணி வாழும் உன்னவளாய்..
சென்றுவா விரைவில் உனக்கான ராதையிடம்..
அவள் காத்திருப்பாள்- விழிகள் குளமாகிட..
சென்றுவா விரைவில் உனக்கான ராதையிடம்..
அவள் காத்திருப்பாள்- விழிகள் குளமாகிட..
No comments:
Post a Comment