Wednesday, November 2, 2011

விழிகள் குளமாகிட..

உனது வருகைக்காய் 
ஏங்கும் மனதுக்கு 
உன் சிறு பிரிவைக்கூட
தாங்க சக்தியில்லை..
நீ வரும்போது 
துள்ளிக்குதிக்கும்
இந்த இதயம்- நீ 
செல்லும்போது 
துடிப்பற்று நின்று விடுகிறதே..
உன் வரவை எண்ணி 
மலரும் விழிகள்- நீ
செல்லும் பொழுதினில் 
விழிநீர் உதிர்த்து 
வாடுகிறதே கண்ணா..
உன்னோடு நானிருக்கும் 
நேரங்ள் அத்தனையும் 
என் கல்லறை வரை 
அழியாது- அழிக்கமுடியதது..
உன்னோடு இருக்கும் 
அந்த நேரங்களுக்காய்
தினமும் தவிக்கும் மனதுடனும் 
நீர் சிந்தும் விழியுடனும் 
காத்திருப்பாள் இவள் - என்றும் 
உன்னை எண்ணி வாழும் உன்னவளாய்..
சென்றுவா விரைவில் உனக்கான ராதையிடம்..
அவள் காத்திருப்பாள்- விழிகள் குளமாகிட..

                                                                       

No comments:

Post a Comment