Tuesday, November 15, 2011

பனித்தீவில்..


வெண் பனியின்
குளிர் மென்மை
குளிர் தென்றலின்
இதத்தின் சுகம்..


மனதினில்
மகிழ்ச்சி 
பொங்கும்
பனிக்கால
மேகங்கள்...


பனித்துளியின்
தழுவல்கள்
என்னோடு
கதைபேசும்- உந்தன்
கண்ஜாடை காட்டி..


இளைய மனது
இன்பத்தில்
மிதந்து
சிறகடிக்கும்- உன்
இதயமெனும்
ஆழ் கடலில்..

மண்மீது
பனி தூவும்..
என் மீது- உன்
மௌனம் 
பேசும்....

பனிக்கால
குளிர் 
இதத்தில்
உந்தன்
பனித்தீவில்
படகானேன் 
நான்...!!!


No comments:

Post a Comment