இழப்பதற்கு ஏதுமில்லை...
சுவாசத்தில்
நிறைந்தது
வீரம்..
செங்குருதி
செழித்தது
வீரத்தில்...
இழப்பிற்கு
பல இருந்தாலும்
இழக்க மறுப்பது
மானத்தை..
கண்களிலே
அனல் தெறிக்க
சித்தம் நினைப்பது
தன் சுற்றத்தை..
உயிர் இழப்பினும்
மாறாதது வீரம்
மனம் மறப்பினும்
நினைப்பது மானம்...
இனி
இழப்பதற்கும்
ஏதுமில்லை-இருந்தும்
தலை தாழவில்லை...!
No comments:
Post a Comment