Wednesday, April 3, 2013

Future Leaders Friendship..


எங்கிருந்தோம்
இத்தனை நாளாய்..
இங்கு வந்து 
ஒன்றாயிணைந்தோம்..

முதலிரண்டு நாட்களும்
தனிமையிலே கழிந்துவிட
பின்வந்த நாட்களெல்லாம்
பூரிப்பை பரப்பியது...

கனவுகள் பலகொண்டு
கைகோர்த்தோம் நாமிங்கு..
கலையாத நம் நட்பு
கவிபாடும் காலமெல்லாம்..

சின்னச்சின்னதாய் சண்டைகள்
சிலநேர்க் கோபங்கள்..
கொஞ்சலான பேச்சுக்கள்
கெஞ்சலாய் சில காலங்கள்..

நன்நான்கு பதினாறாய்
நாட்கள் நீண்டுவிட
வீடுசெல்லும் நாளெண்ணி
விடையின்றித் தவித்திருந்தோம்..

ஆணென்ன? பெண்ணென்ன?
இனமென்ன? மதமென்ன?
எதிர்பார்க்கவில்லை நாம்
நட்பினில் சிறகுவிரித்தோம்..

அதிகாலை 
சோம்பல் முறித்து
அவதி அவதியாய் 
உடைகளணிந்து
அந்தரத்தில் பறந்திடுவோம்..

தூங்கிவழிய Lecture hall
தூக்கம் கலைய Playground
கடக்கும் நாட்களை எண்ணியபடி
கழிகிறது காலம்..

சொல்லப்பட்ட காதல்கள்
சொல்லத்துடிக்கும் காதல்கள்
விழிநனைக்கும் பாசங்கள்
விடைபெறுகிறது எம்மைவிட்டு..

விடைபெறும் நாளெண்ணி
மனம் துடிக்கும்..
விடைபெறும் பொழுதுகளில்
விழி கலங்கும்..

எங்கு சென்றாலும்
எப்படியென்றாலும்
பல்கலையில் கைகோர்ப்போம்
நட்புவானில் சிறகடிப்போம்..

இது நம்
" Future Leaders Friendship..! "

No comments:

Post a Comment