16 நாட்கள் வனவாசம் முடித்து
வீடுதிரும்பக் காத்திருப்போம்..
கனவுகள் பலகொண்டு
நினைவுகளை சுமந்திருப்போம்..
புதுவித அனுபவம்..
அதில்
தினம் தினம்
ஒரு யுகம்..
சில பொழுதுகளில்
இன்பங்கள்..
சில பொழுதுகளில்
துன்பங்கள்..
ஏச்சுக்களும்
பேச்சுக்களும்
சகஜமாயின
எமக்கு..
தண்ணீருக்கு சண்டை..
குளியலுக்கோ
மிகப்பெரும் சண்டை..
முன்பு
தபாற்காரன்
தெய்வமாய் தெரிந்தான்..
இன்று
தண்ணி பவுசர்காரன்
தெய்வமானான்..
வீட்டு நினைப்பு
மனதை அழுந்த
விழிகள் கலங்கியபடி
காத்திருந்தோம்..
எதுவாயிருந்தாலும்
நட்பினில் மட்டுமே
இன்பம் கண்டோம்..
மனம் மலர்ந்தோம்..
பலவற்றில் பிரிவினைகள்..
பரிதவிப்பில் சிலநொடிகள்..
நினைக்கமறக்கும் நினைவுகளை
மீட்டுவதில் இன்பம் கண்டோம்..
சில பொழுதில்
புரிந்துணர்வு விட்டுப்போனது..
ஆனால்
நட்பு கைகொடுத்தது..
பற்பல அதிகாரங்கள்..
அதனால்
அடக்குமுறையில்
கழிந்தன நாட்கள்..
எனினும்,
கண்ணீர் துடைத்தது
நம் நட்பு..
காலமெல்லாம்
கைகோர்ப்போம்..
நட்பின் மடியில்
தினம் மகிழ்வோம்..
நாளைய விடியலெண்ணி
இன்றே
தூக்கம் தொலைத்தோம்..
விடைகொடு நட்பே,
பிரிந்துபோகின்றோம்
நாளைய பொழுதில்..
இது நம்
16 நாட்களின்
வனவாசக்குறிப்பு...!
No comments:
Post a Comment