சாலையோரத்தில்
தனித்துவிடப்பட்ட
காலி இருக்கைகள்..
மேசைமீது
ஒதுக்கிவைக்கப்பட்ட
வெற்று தேநீர்க் குவளைகள்..
உனக்கான கவிதைகளால்
நிரப்பப்பட்ட
வெள்ளைத்தாள்கள்..
நேரம்போவதே தெரியாமல்
சுற்றும்
சுவர்க்கடிகார முட்கள்..
நாம் தொலைவாகிப்போனது
தெரிந்து
சோகித்து பாடும்
இராப்பறவை..
கரைவதா? காய்வதா?
என்று தெரியாமல்
வழியும்
நம் கண்களின் விழிநீர்..
காலத்தை சபித்தபடி
ஒளிரும்
தேய்ந்துபோன சந்திரன்..
இவையெல்லம்
கண்முன் நிதர்சனமாகியும்
நம்பமறுக்கும்
நம் இதயம்..
அனைத்தையும் கடந்து
நாம் மட்டும் கைகோர்க்கிறோம்
கனவுகளின் மடியில் -
உணர்வுகளின் ஜனிப்பில்..!
No comments:
Post a Comment