Tuesday, November 1, 2011

இவள் உன்னவள் ...


நாட்களின் விடியல் 
என்றும் 
என் வாழ்வில்
உன்னை 
எதிர்பார்த்தே 
மலர்ந்திடும்..
என் 
விழிகளின் 
தேடலில் 
விழுந்து 
எழுபவன் நீ..
உள்ளத்தின் 
உணர்வுகள் 
தவிப்பது 
உன் 
ஸ்பரிசத்திற்காய்..
என் 
மௌனங்கள் 
கூட 
இசையமைக்கும்
உன் ஸ்வாசம்
தொட்டால்..
உனது 
வருகைக்கான 
காத்திருப்புக்கள் 
கூட 
தாலாட்டுத்தான் 
என் ஏக்கத்திற்கு..
நீ கூட 
ஓர் குழந்தைதான்- உன் 
தாயாக நான் மாறியதால்..
என்னவனே,
நான் கூட 
உன் பிள்ளையாக 
வேண்டுமடா- இவள் 
உன்னவள் என்பதால்...
                                                                       

No comments:

Post a Comment