Wednesday, July 18, 2012

உண்மைக்காதலன்..



என்னவளே..
எங்கிருந்து வந்தாய்
என்
இதயத்தை
துளைப்பதற்காய்...

கண்மணியே..
காத்திருப்புக்களுடன்
என்
காதலும்
தொடர்கிறதடி
உன்னை..

வானத்து
நிலவாக
நீயிருக்க:
வையத்துள்
கனவாகி
நான் 
தவித்தேனே..

மின்னல்
சிரிப்புக்காறி நீ..
ஒரு
பிஞ்சு
நெஞ்சக்காறி..

கனவுகள்
பலகோர்த்து
கவிதையில்
சிலை
வார்த்து
மெல்லினமே
உனக்காய்
மெட்டமைக்கிறேன் -
என்
மொட்டான
காதலை
மலரச்செய்வாயா..?

பௌர்ணமியே
உனக்காய்
பார்த்திருக்கிறேன் -
என்
விழிகளுக்கு
வரத்தை
நீ
தருவாயா..?

காதல் 
இல்லையடி
கண்ணே -
உன்மீது
காமமும்
இல்லையடி
பெண்ணே..

காதலது தாண்டியதாய்
காமமது தாண்டியதாய்
உண்மையான ஒன்று
உன்மீது என் உள்ளத்திற்கு..

புரிந்து கொள்
என் உயிரே - என்றும்
எனை பிரிந்து
போகாதே சகியே..

நீ வரும் வழிபார்த்து
என் விடியல்கள்
நகர்ந்துவிட
உன்னிரு விழிபார்த்து
என் ஜீவன்
உறங்குமடி..

தாயாகி
சேயாவேன்..
தாலாட்டி
சீராட்டி
உன்னை
என் மார்பில்
பாராட்டுவேன்..

உன் அன்பில்
உயிர் கரைவேன்..
என்றும்
உனக்காய்
உருக்கொள்வேன்..

என்னவளே,
உனக்காய்
காத்திருக்கும்
இவன்
உன் அன்பில்
ஊமைக் காதலன் -
உனக்கான
உண்மைக்காதலன்
என்றும் காதலுடன்...!!

No comments:

Post a Comment