Monday, January 23, 2012

காத்திருப்பு....



நீ
வருவாய்-வருவாய்
என்று
தவிக்கும்
உள்ளத்திற்குத்தான்
தெரியும்
அதன்
காத்திருப்பின்
அர்த்தம்
என்னவென்று...!

உன் மொழி
கேட்க
ஏங்கும்
உணர்வுகளுக்குத்தான்
தெரியும்
அதன்
காத்திருப்பு
என்னவென்று..!

உன்னைபற்றி
என்னைத்தவிர
எல்லோருக்கும்
தெரிந்திருக்கிறது-
ஆனால்
உன்னவளுக்கோ
தெரியவில்லை..!

ஏதோ
அதுதான்
சொல்லமுடியாத
சோகம்...
கூறவில்லை
உன்னிடம்- கூறத்
தெரியவுமில்லை
இவள் மொழிகளுக்கு..!


என்னவோ
புரியமுடிந்தால்
நீ
புரிந்துகொள்-இல்லையேல்
விட்டுவிடு ஏனென்ற
காரணத்தை ஆராய்வதை..!

உனக்கான
ஆழ்மனதின்
பாசங்கள் தான்
இவளது
மௌனத்திற்கு
காரணம்..!

உனக்கான
மொழிகள்
இல்லாத
தனிமைதான்
இவளது
சோகத்திற்கு
ஆதாரம்..!

எல்லாமே
உன்
அன்பின்
பாசம்
செய்யும்
மாயம்...!

என்றும்
உனக்காய்
இறுதிவரை
தொடரும்
இவள்
காத்திருப்புக்கள்..!

No comments:

Post a Comment