Friday, January 20, 2012

புன்னகை தேசத்துக் குயில்..



பல மௌனங்களை
பாரங்களாக்கி
சுமந்தது
அந்த இதயம்..

பழைய நினைவுகளில்
புதைந்து சிதைந்து
விம்மியது
அந்த இதயம்...

ஏதோ ஒரு
கனவின் கருவை
இழந்த வலியில்
துடிக்கும் இதயமது..

பெண்மையின்
மென்மைகளை
தன்னுள் புதைத்து
மடிந்த இதயமது..

தனக்கான
வாழ்க்கையை
தான் வாழாது
தத்தளித்த இதயமது...

இன்று
ஏதோ ஓர்
வசந்த காற்றின்
வருகை...

மீண்டும்
துளிர்க்கிறது
இதயம்...

சிதைந்துபோன
புன்னகை மலர்களை
தேடி எடுத்து
கோர்க்கிறது தனக்காக..

ஒடிந்துபோன
நம்பிக்கை வேரில்
பூக்கிறது- புது
உலகம் தேடி..

இன்று-

வண்ணக்
கனவுகளின்
வகையான
சிதறல்கள்..

தித்திக்கும்
இன்பங்களின்
திறவுகோலாய்
சில சொந்தங்கள்...


அழுது அழுது
சிவந்த விழிகள்
இன்று அதிசயமாய்
மலர்கின்றன...

விம்மி விம்மி
துடித்த உதடுகள்
புன்னகையில்
சிவக்கின்றன...

மரத்துப்போன
இதயமதில்
மீண்டும்
மந்தகாசமாய்
மலர்வொன்று..

மீண்டும்
அந்த இதயம்
சிறகடிக்கிறது
புன்னகை தேசத்துக் குயிலாகி....!!!


No comments:

Post a Comment