ஏக்கம்..
விடியமறுத்து
இருளில்
தொலையும்-என்
ஒவ்வொரு
இரவுகளும்
விழிநீரிலேயே
கசிகின்றன..
உதடுகள்
உன்முன்னே
புன்னகைத்தாலும்
உண்மையில்
உள்ளம்
அழுகிறது..
தொலைந்துபோகும்
என்
ஒவ்வொரு
பயணமும்
உன்னைத்தேடியே
முடிகின்றது...
வானில்
எழும்
விடிவெள்ளியை
தினமும்
எண்ணியே-இந்த
கனவும்
கலைகின்றது...!
No comments:
Post a Comment