Saturday, January 14, 2012

ஏக்கம்..


விடியமறுத்து
இருளில்
தொலையும்-என்
ஒவ்வொரு
இரவுகளும்
விழிநீரிலேயே
கசிகின்றன..

உதடுகள்
உன்முன்னே
புன்னகைத்தாலும்
உண்மையில்
உள்ளம்
அழுகிறது..

தொலைந்துபோகும்
என்
ஒவ்வொரு
பயணமும்
உன்னைத்தேடியே
முடிகின்றது...

வானில்
எழும்
விடிவெள்ளியை
தினமும்
எண்ணியே-இந்த
கனவும்
கலைகின்றது...!

No comments:

Post a Comment