தொலைகின்ற
ஒவ்வொரு
பொழுதுகளும்
விழிநீருடனே
கலக்கின்றது..
மொழிகளின்
மௌனம்-அது
கவிகளாகி
கலைகின்றது..
நிஜத்தை
தேடும்
நிழலாய்
உயிரும்
நிர்க்கதியானது
அங்கு...
இளமையின்
வசந்தங்களை
தொலைத்த
ஏக்கத்தோடு
போராடும்
அங்கு ஓர்
பாவை....
மெல்ல கசியும்
இருளின்
சலனத்திலே
உறைந்துபோனது
ஒரு இதயம்..
காற்றின்
ஓசைகூட
இரக்கமின்றி
கலங்கடித்தது..
ஆனால்
அந்த
ஜீவன்மட்டும்
விடியும் பொழுதை
விம்மலுடன்
எண்ணியது...
No comments:
Post a Comment