Tuesday, February 28, 2012

காதலின் பயணங்கள்..

இன்று காதலர் தினம் தான்... 

ஆனால் அவர்களுக்கு என்றுமே காதலர் தினமே... 

ஆனாலும் ஏனோ அவளுக்கு இன்று அவனை பார்த்து ரசிக்க உள்ளம் 

துடித்தது...

நிமிடங்களின் நகர்வை விட அவள் உள்ளத்தின் துடிப்பு 

வேகமாயிருந்தது... 

அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்... 

அவனை பார்த்திட துடிக்கும் விழிகளுடன் சென்ற அவளுக்கு அவன்

 முகம் கண்டவுடன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... 

மனதிற்குள் துள்ளிக்குதித்தாள். 

அவன் நெருக்கங்கள், அவன் தீண்டல்கள், செல்லக் கோபங்கள், 

தித்திக்கும் முத்தங்கள்

இன்றைய நாளில் அவளுக்கான அவனது பரிசுகளாயின. 

ஏதோ அவனுடன் காரணமே இல்லாமல் செல்லமாக சண்டையிட்டு

அவனை தன் பின்னே கெஞ்சவைத்துப்பார்ப்பதில் அலாதிப் பிரியம் 

அவளுக்கு. 

அவனுடன் இருக்கும் பொழுதுகளில்தான் அவள் சோகங்களை மறந்து 

சிறகடிக்கின்றாள் பட்டாம்பூச்சியாகி... ஆனாலும் 

அவனை பிரியும் அந்த நிமிடங்களில்-

 அவள் மனதின் துடிப்பு நின்றுவிடுகிறது - விழியின் மொழி நீராகி

 மலர்கிறது. 

அவளிற்கு மட்டுமல்ல- அவனது நிலையும் அதுதான். 

நாளைய மலர்வை எண்ணியபடியே 

இருவரின் மன உணர்வும்

இன்று 

ஒருமித்து பயணிக்கின்றது வாழ்க்கை பாதையில்..


No comments:

Post a Comment