புனிதத்தை
காயப்படுத்தியது
அவள்தான்..
நிஜம்தான்..
அவளுக்கு
வாழ்க்கையை
வாழத்தெரியவில்லை..
"ஏன்"
என்ற
வினாக்கள்
பல
அவளுள்ளும்
உண்டு..
ஆனால்
விடைதான்
கிடைக்கவில்லை
இதுவரை...
அந்த
புனிதமான
அன்பிற்கும்:
காதலிற்கும்
அவளுக்கு
தகுதியில்லை
போலும்..
புனிதத்தை
காயப்படுத்தியதால்
அவள் விழிகள்
நீரை உதிர்த்தது..
எனினும்
அந்த விழிநீர்
புனிதத்தை
களங்கமாக்கும்
என்பதால்
அது
அவளுள்
புதைந்தே போனது...
புரிந்துகொள்ளும்
உன்னை
புரிந்துகொள்ள
மறுத்தது
அவள்தான்..
நிஜம்தான்..
அவளுக்கு
வாழ்க்கையை
மகிழ்ச்சியாக
வாழவே
தெரியவில்லை..!!
No comments:
Post a Comment