Wednesday, February 8, 2012

தனிமையின் நகர்வுகள்...


என் 
தனிமையின் 
கதவுகள்
இரக்கமற்றவை..

என் 
தனிமையின்
அமர்வுகள்
கொடுமையானவை..

என் 
தனிமையின்
தவிப்புகள்
வேதனை நிறைந்தவை..

மௌனமான
அந்தகாரத்தின்
வாசலில்-தனிமையின்
புல்லாங்குழலுடன்
நான் இசைபயில்கின்றேன்
ஓசை ஏதும் எழாமல்..

எந்தோட்டத்து 
புன்னகைச்செடிகள் கூட
பூக்கின்றன-சோகமெனும்
வாடாமலரை..

மலரும் 
அம்மலர்களுக்கு
கண்ணீர் துளிகளை
காணிக்கையாக்கி
இங்கு புலம்புகின்றேன்
மௌனத்தின் தனிமையில்...!

No comments:

Post a Comment