என்
தனிமையின்
கதவுகள்
இரக்கமற்றவை..
என்
தனிமையின்
அமர்வுகள்
கொடுமையானவை..
என்
தனிமையின்
தவிப்புகள்
வேதனை நிறைந்தவை..
மௌனமான
அந்தகாரத்தின்
வாசலில்-தனிமையின்
புல்லாங்குழலுடன்
நான் இசைபயில்கின்றேன்
ஓசை ஏதும் எழாமல்..
எந்தோட்டத்து
புன்னகைச்செடிகள் கூட
பூக்கின்றன-சோகமெனும்
வாடாமலரை..
மலரும்
அம்மலர்களுக்கு
கண்ணீர் துளிகளை
காணிக்கையாக்கி
இங்கு புலம்புகின்றேன்
மௌனத்தின் தனிமையில்...!
No comments:
Post a Comment