Saturday, July 11, 2015

கௌதமி vs கமல் vs ஆஷா சரத்.



’பாபநாசம்’ பெயரைப்போலவே படமும் அருமை.

படத்தின் வெற்றிக்கு வாய்ப்பளித்த விடயங்கள் ஏராளம்.
1) கௌதமியின் இயல்பான நடிப்பு
2) கமலின் யதார்த்த பாத்திரபுனைவு
3) படத்தின் காட்சியமைப்பு
4) மொழிநடை
5) காமெரா, இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை....

விறுவிறுப்பான அதேநேரம் அழகான திரைக்கதையுடன் அமைந்த அற்புதமானதொரு கலைப்படைப்பு. ஒவ்வொரு பாத்திரங்களின் கண்கள் பேசும் மொழியையும் ஒன்றுவிடாமல் பதிவுசெய்துள்ளது காமெரா. எப்படி ஒரு நடுத்தர குடும்பம் அன்பாலும் அழகாலும் பின்னப்பட்டிருக்கும் என்பதை வாழ்ந்துகாட்டியிருக்கிரார்கள். படம்பார்க்கும்போதே நாமும் அவற்றோடு வாழ்ந்துவிடுகிறோம்.

எனக்கென்னவோ பலநாட்களின் பின் கமலின் இயல்பான நடிப்பை உணரமுடிந்தது. ( இப்பகூட கமல் அழகாத்தான் தெரியுறாரு கௌதமிய விட) அன்பான தந்தை தாய், அழகான பிள்ளைகள் என அழகியதொரு குடும்பம். வாழ்கையின் ஆரம்பத்தில் இருந்த காதல் மாறாமல் கைகோர்க்கும் அழகான கணவன் மனைவி என யதார்த்தவாழ்வியலின் பிரதிபலிப்புக்கள் அருமை.

அளவான விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கான ஊகம் எதுவுமின்றி காட்சி நகர்கிறது. காட்சியமைப்புப்பற்றி பார்த்தால் செயற்கையின்றி இயற்கையோடு இணைந்த அழகான பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ளது அருமை. காமெரா கதைபேசியுள்ளவிதம் அட்டகாசம்.
குறித்த இடங்களில் வரும் extreme close up shot மற்றும் extreme wide shot இன் காட்சிக்கோர்ப்பு அருமை.

ஜிப்ரானின் இசை அருமை. கதையோடு கதைபேசும் இசை அட்டகாசம். பின்னணியிசை தேவைக்கேற்றவகையில் அருமை.
கதைசொல்லும் பாங்கு சலிப்பற்றவகையில் ஆர்வத்தைதூண்டும் விதமாய் நகர்கிறது படைப்பு.



இதனைவிட முக்கியவிடயம் ஆஷா சரத். வைத்தகண் எடுக்காமல் பார்க்கவைக்குமளவு அற்புதமான நடிப்பு. இவரது கதைபேசும் கண்கள் அருமை. பாத்திரத்திற்கேற்ற உடலசைவு + பேச்சு + கொஞ்சம் திமிர் + கெஞ்சும் தாய்மை + பேச்சு + போலீசுக்கேற்ற கம்பீரம் எல்லாம் அட்டகாசம்.

ஆக மொத்தத்தில் அழகான அற்புதமான படைப்புக்களில் இதுவும் ஒன்று.
பாபநாசத்தில் குளித்து பாழ்பட்டுப்போன தமிழ்சினிமாவின் பாவங்களை கழுவிக்கொள்வோம்.

-பிறைநிலா-

No comments:

Post a Comment