என் ஒளியிழந்த வானை
உமிழ்ந்துகொண்டிருக்கிறாய்
ஷாகிரா
சிவப்பு பச்சை மஞ்சளென
நீ துப்பிய வண்ணங்கள்
அங்கங்கே
சிதறி பறக்கின்றன.
வானவில்லின்
வண்ணம் விட்டு
புது வண்ணம்
குழைத்து இழைக்கிறாய்.
’சர்பத்’நிறத்தையும் மிஞ்சிடும்
இளவண்ண இதழ்கொண்டு
இதழ்குவிக்கின்றாய்.
ஜொலித்து நிற்பது
என் வண்ணம் கரைந்த
வானம் மட்டுமல்ல
எண்ணமிழந்த
வாழ்க்கையும் தான்.
உன் புன்னகையின்
விழிம்பில்
பரிசளிக்கின்றாய்
’குதா’வின்
பரிசுத்த ஆசிகளை.
ஷாகிரா...
ஓ..நீ
எங்காவது
பறந்துகொண்டேயிருப்பாய்
ஏதாவது ஒரு
ஒளியற்ற வானை
வண்ணமாய் உமிழ்வதற்கு!
-பிறைநிலா-
No comments:
Post a Comment