Sunday, May 15, 2016

நீ எனும் பெருங்கடல்.



மழை ஒழுக்குகளில்
இசையாய் கசிகிறாய் நீ.
மௌனங்களை உடைக்க விடு.
இந்த நேசங்களை பேசவிடு.

நீ எனும் ஒரு துளி போதும்
தீராப் பெருங் காதலாய்
யுகம் கடப்போம் வா.

என் மன்மத மழையே
உயிர்வேர்களில் புரையோடிப்போன
பிரிவுகளை அடித்துச்செல்.
நேசம் பற்றிய உனது தூறல்களை
விசிறிச்செல்.

நீ ஜனித்திருக்கிறாய்
நான் ஜீவிப்பதற்காய்.
மீண்டும் நம் நேசங்களை
பேசவிடு
நனையட்டும் ஜீவநாடி.



-பிறைநிலா-

No comments:

Post a Comment