விடியலைத்தேடிடும்
ஒவ்வொரு
அதிகாலைவேளையிலும்
என் கவி
பூபாளமிசைக்கும்...
நம்பிக்கையின்
நட்சத்திர ரேகைகள்
அதன் ஸ்வாசத்தில்
பொதிந்திருக்கும்..
நட்புடன்
கைகோர்த்து
நளினமாய்
நடை பழகி
நாட்களை
வசந்தமாக்கும்..
மௌனமாய்
அந்திசிந்தும் நேரம்
மார்போடு
கதை பேசும்..
சோகங்கள்
மறந்து
இருள் போர்த்து
துயில்கையில்
தாலாட்டின்
இசைபாடும்..
மீண்டும்
விடியலைத்தேடிடும்
ஒவ்வொரு
அதிகாலைவேளையிலும்
என் கவி
பூபாளமிசைக்கும்...!
No comments:
Post a Comment