Thursday, June 28, 2012

மௌனமான நேரம் ...




மௌனமான நேரம்
மனதின் காயங்கள்
மீண்டும் ஜனித்திடும்..
தனிமையின்
தோழியாய்
நான் 
மாறிடும் நேரம்...

சொல்லப்படாத
சோகங்களையும்
வற்றிவிடாத 
காயங்களையும்
கழைவதற்காய்
பயணப்படுகிறேன்..

பசுமை 
போர்த்திய
பூமி..
அதில்
செழுமை
சூடிய
வனாந்தரம்..

தனித்து
நடக்கிறேன்..
தவிப்புகளை
புதைத்தபடி..

தத்திவரும்
சின்னச் சிட்டும்
தழுவ வரும்
வண்ணக் காற்றும்
வஞ்சமில்லாமல்
என்
நண்பராகினர்...

சோகத்தின்
ஆடை
சிறிது சிறிதாக
கழையப்பட்டது போன்ற
ஓர் எண்ணம்..

நழுவி விழும்
சோகத்தின் ஆடையை
பார்க்காமலே 
என் வழி செல்கிறேன்-
என் நண்பர்களுடன்...

No comments:

Post a Comment