அழகிய நிலாச்சாரல் .
என் உணர்வின் உயிர்ப்பில் உருவான மொழித்துளிகள் இவை .
Sunday, November 27, 2011
என்னுடன்....?
இழப்பதற்கு ஏதுமில்லை...
சுவாசத்தில்
நிறைந்தது
வீரம்..
செங்குருதி
செழித்தது
வீரத்தில்...
இழப்பிற்கு
பல இருந்தாலும்
இழக்க மறுப்பது
மானத்தை..
கண்களிலே
அனல் தெறிக்க
சித்தம் நினைப்பது
தன் சுற்றத்தை..
உயிர் இழப்பினும்
மாறாதது வீரம்
மனம் மறப்பினும்
நினைப்பது மானம்...
இனி
இழப்பதற்கும்
ஏதுமில்லை-இருந்தும்
தலை தாழவில்லை...!
Saturday, November 26, 2011
துணை...
மலர்..
உன் விழியோரம்
நானிருந்து
கதை படிக்கும்
நேரம்
என் மனதோரம்
கானகுயில்
கவி பாடும்..
உன் மொழியோரம்
நான் மயங்கும்
நேரம்
என் உணர்வோரம்
உன் சுகந்தம்
பூக்கும்..
காதலா,
உன்னை
கடவுளாய்
ஏற்கிறேன் -
உனக்கான
பூஜை மலராய்
நான் வேண்டுமென்பதால்...!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)