Sunday, November 20, 2011

சின்னவனே...

 

சின்னவனே,
உன் ஸ்பரிசம்
மலரினும்
மென்மையோ...

உன் 
செல்ல சிணுங்கல்கள்
சின்ன குறும்புகள்..

உயிர்வரை
ஜனிக்கிறதே
என்ன மாயமோ...

குழந்தை
ஒன்றின்
நாதம்
இதயத்தின்
சங்கீதம்...


அழகின்
சொப்பனங்கள்
உன்னுள்ளே
அடங்கியதோ..

தத்தும்
தாவும்
உன் 
பிஞ்சு பாதம்...

சின்னக்
கண்கள்
சிட்டாய் 
துடிக்கும்..

தொட்டு
பார்க்கும்
உன்
சின்ன கரம்...

சிங்காரக் கண்ணா
சித்தத்தில்
நிறைந்தாயே..

உன்
மொழியின்
இனிமையிலே
சோகம்
மறக்கிறேன்
நான்....!

நட்பின் நிஜம்..



 நட்பு - நண்பர்கள்
பலவிதங்களில்..
பல ரகங்களில்..

தன் நட்பிற்காய்
உயிரையும் 
விடுபவன்
ஒரு 
ரகம்...

தனக்காய்
நட்புக்கொள்பவன்
ஒரு 
ரகம்..

நட்புக்கூட
கற்பை 
போன்றது-
களங்கப்பட்டால்
பெறுமதியற்றதாகிடும்..

நட்புக்கூட
உயிரை 
போன்றது-
தோழமையின்
உயிர்
பேணுவதால்....

சரித்திர நண்பர்கள்
கன்னனும்-துரியனும்..

இன்று
அந்த வகையில்
யாருமில்லை...

நட்பை
பேணு..
உண்மையாயிரு-
நட்பும்
இருக்கும்
உன்னோடு
என்றும்
உண்மையாய்...!!