கவிகளின்
புதிய
பரிணாமம்..
காவியங்களின்
புதிய
அடிவாரம்...
எண்ணத்தின்
இனிய
பகிர்வுகள் இவை...! -
♥என் கவிகள்..!♥
காதலர்களின் தனிமைக்கு
கவிபாடும் நிலவிருந்தால்
ரணங்கள் கூட
இனிமையாகுமே..
குவலயத்தின்
இருள் தனிலே
குளிர் நிலாவின் மடியினிலே
தூங்கு நீ - அமைதியாக..
இருளை கிழித்து
தன்னொளி வீசுகையில்
உள்ளம் உறங்கும்- ஆனால்
உணர்வுகள் விழிக்கும்..!
தண்ணீரில்
மீன்
அழுதால்
கண்ணீரை
யார்
அறிவார்...!
என்
நிலையும்
அதுபோல தானோ..?
இன்றைய
விடியலை
எண்ணித்தான்..
இத்தனை
நாட்களாய்
காத்திருந்தேன்...
அழகான
பொழுதுகள்
அவை...
அழகான
நாட்கள்
இவை....
உன்
நினைவில்
நான்
இருந்த
இனிய
தருணங்கள்... ♥