Monday, October 31, 2011

♥என் கவிகள்..!♥

 
கவிகளின்
 
புதிய 
பரிணாமம்..
 
காவியங்களின்
 
புதிய 
அடிவாரம்...
 
எண்ணத்தின்
 
இனிய
பகிர்வுகள் இவை...! -
♥என் கவிகள்..!

உணர்வுகள் விழிக்கும்..!

 
காதலர்களின் தனிமைக்கு
கவிபாடும் நிலவிருந்தால்
ரணங்கள் கூட
இனிமையாகுமே..

குவலயத்தின்
இருள் தனிலே
குளிர் நிலாவின் மடியினிலே
தூங்கு நீ - அமைதியாக..

இருளை கிழித்து
தன்னொளி வீசுகையில்
உள்ளம் உறங்கும்- ஆனால்
உணர்வுகள் விழிக்கும்..!

என் நிலை

 
தண்ணீரில் 
மீன் 
அழுதால்
 
கண்ணீரை 
யார் 
அறிவார்...!
 
என்
நிலையும் 
அதுபோல தானோ..?

♥ நினைவில்..

இன்றைய 
விடியலை
 
எண்ணித்தான்..
 
இத்தனை 
நாட்களாய்
 
காத்திருந்தேன்...
அழகான
 
பொழுதுகள் 
அவை...
 
அழகான
 
நாட்கள்
 
இவை....

உன் 
நினைவில்
 
நான் 
இருந்த
 
இனிய 
தருணங்கள்... ♥