Sunday, July 22, 2012

கவி..



கரம் சேர்த்து
கைகோர்த்து
கவிதைகள் பாடிய
கனவு நாட்களே
இன்று கவியானதே..!

உனக்காய்...



கண்கள் கதைபேசி
கைகள் ஸ்பரிசித்த
கனவு நாட்களை
பரிசளித்திருக்கிறாய் நீ-
எனக்காய்..
அவற்றை 
ஸ்வாசித்தபடி நான் -
உனக்காய்...!

நினைவுகளினால்...




உடைந்து விழும்
கண்ணீர்த்துளியிலும்
உருக்குலைந்தோடும்
உள்ளத்து நினைவுகளிலும்
தெள்ளத்தெளிவாய் தெருகிறாய்..
மீண்டும் மீண்டும்
நெருங்குகிறாய்-என்
நினைவுகளினால்..!

யாசகம் ..




விழிகள் மூடி
உன்னை யாசிக்கின்றேன்..
யாசகனே எனக்கோர்
யாசகம் தருவாயா..?
என்றும் 
உன்னருகிலிருப்பதற்காய்...!