Thursday, February 9, 2012
Wednesday, February 8, 2012
தனிமையின் நகர்வுகள்...
என்
தனிமையின்
கதவுகள்
இரக்கமற்றவை..
என்
தனிமையின்
அமர்வுகள்
கொடுமையானவை..
என்
தனிமையின்
தவிப்புகள்
வேதனை நிறைந்தவை..
மௌனமான
அந்தகாரத்தின்
வாசலில்-தனிமையின்
புல்லாங்குழலுடன்
நான் இசைபயில்கின்றேன்
ஓசை ஏதும் எழாமல்..
எந்தோட்டத்து
புன்னகைச்செடிகள் கூட
பூக்கின்றன-சோகமெனும்
வாடாமலரை..
மலரும்
அம்மலர்களுக்கு
கண்ணீர் துளிகளை
காணிக்கையாக்கி
இங்கு புலம்புகின்றேன்
மௌனத்தின் தனிமையில்...!
Sunday, February 5, 2012
Wednesday, February 1, 2012
வாழத்தெரியாதவள்..!
புனிதத்தை
காயப்படுத்தியது
அவள்தான்..
நிஜம்தான்..
அவளுக்கு
வாழ்க்கையை
வாழத்தெரியவில்லை..
"ஏன்"
என்ற
வினாக்கள்
பல
அவளுள்ளும்
உண்டு..
ஆனால்
விடைதான்
கிடைக்கவில்லை
இதுவரை...
அந்த
புனிதமான
அன்பிற்கும்:
காதலிற்கும்
அவளுக்கு
தகுதியில்லை
போலும்..
புனிதத்தை
காயப்படுத்தியதால்
அவள் விழிகள்
நீரை உதிர்த்தது..
எனினும்
அந்த விழிநீர்
புனிதத்தை
களங்கமாக்கும்
என்பதால்
அது
அவளுள்
புதைந்தே போனது...
புரிந்துகொள்ளும்
உன்னை
புரிந்துகொள்ள
மறுத்தது
அவள்தான்..
நிஜம்தான்..
அவளுக்கு
வாழ்க்கையை
மகிழ்ச்சியாக
வாழவே
தெரியவில்லை..!!
Subscribe to:
Posts (Atom)
