Thursday, September 5, 2013

ஓர் ஊமை தா(வே)சியின் உளறல்..


உங்கள் கால் இடுக்குகளுக்கும்
காற் சாராய்களுக்கும்
அழிந்துதான் போகின்றன
எங்கள் பெண்மை..

சுயத்தையும்-சுதந்திரத்தையும்
இருள்களில் மட்டுமல்ல
வெளிச்சங்களிலும் 
இழந்துகொண்டுதானிருக்கிறோம்..

கண்ணகி தான்
நாங்களும்- எம்
மனத்தினால்..

உங்கள்
எச்சிலோடுசேர்த்து
நகக்கீறல்களையும்
சுமக்கும்
இந்த ”உடலங்களும்” 
புனிதமானவைதான்
அழுக்கற்ற எம் மனங்களை
இவை சுமப்பதால்..

நள்ளிரவுகளில் மட்டும்
எம் முனகல்களை கேட்கும்
நீங்கள்
எம் விம்மல்களையும்
சிறிது
கேட்கலாம் இன்று..

மொழிகடந்த அவற்றை
புரிந்துகொள்ள
முடியாதுதான்..
 உங்களால்
எங்களை 
புணர்ந்துகொள்ளமட்டுமே
முடியும்..


கறைபடிந்த எங்கள்
சேலைகளும்:
தலையணை போர்வைகளும்
சொல்லும் இன்னும்
நாங்கள் கறையற்றவர்களென..

எங்கள் காலிடுக்குகளில்
இல்லை கற்பு..
என்றும் உங்களால்
தொடமுடியாத மனதினுள்
வைத்து பூட்டியிருக்கிறோம்..
உடைத்துப்பாருங்கள்-
உறைந்துபோவீர்கள்..

சதைத்தின்னிகளே,
உங்களால் சதைகளை மட்டும்தான்
சிதைக்கமுடியும்..
எம் சரித்திரத்தையல்ல..

No comments:

Post a Comment